கோவை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.!!

கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தில் பி .எஸ் பி .பி.மில்லேனியம் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. இப்பள்ளிகூடத்தில் வகுப்பறையிலும் கழிவறையிலும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக ” இமெயில் ” மூலம் மிரட்டல் தகவல் வந்தது. இது குறித்து பள்ளிக்கூட சீனியர் மேனேஜர் ஜீவரத்தினம் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் ,சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். போலீஸ் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை . இது வீண் புரளி என்பது தெரிய வந்தது. இந்த “இ-மெயில் ” அனுப்பியவர் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..