காதலி பேசாததால்… காதலன் விஷம் குடித்து தற்கொலை..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கமுள்ள வேட்டைக்காரன் புதூரை சேர்ந்தவர் ஆறுச்சாமி ( வயது 46) கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதி சேர்ந்த ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்தாராம். அந்தப் பெண் கடந்த 4 நாட்களாக ஆறுச்சாமியிடம் பேசவில்லை. இதனால் மனம் உடைந்த ஆறுச்சாமி நேற்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார் .அவரை வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..