வீட்டின் பூட்டை உடைத்து நகை , பணம் திருட்டு – பட்டப்பகலில் துணிகரம்.!!

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள செங்காளிபாளையம், மந்திராலயா கார்டனை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 61) நேற்று முன்தினம் இவரது மனைவி மகள்கள் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலையில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது சமையலறையில் ஒரு பையில் பாதுகாப்பாக வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகள் ரூ. 10, ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்று விட்டனர் .இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் மாரிமுத்து புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..