கோவை ரத்தினபுரி பெரியார் நகர் பக்கம் உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கோகிலா ( வயது 35) இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். 11 மணி அளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் கவிதா என்பவர் கோகிலாவுக்கு போன் செய்து அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக கூறினார் .வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் ,பணம் 5 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடி சென்று விட்டனர் .இது குறித்து கோகிலா ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பார்வதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை – பட்டப்பகலில் துணிகரம்.!!
