வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு..!

கோவை விமான நிலையம் பக்கம் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ் . காலனி, காவேரி நகர சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 64) இவர் கடந்த மாதம் 23ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது இளைய மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இவரது உறவினரான யோகேஷ் சோமசுந்தரத்துக்கு போன் செய்து வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இதை யடுத்து சோமசுந்தரம் நேற்று வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது .அங்கிருந்த 10 பவுன் தங்க நகைகள், 210 கிராம் வெள்ளி பொருட்கள், பணம் ரூ.20ஆயிரம் ஆகியவை கொள்ளைய டிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில்சோமசுந்தரம் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் கபிலராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..