பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை.!!

கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் ஜி .சி .டி .நகரை சேர்ந்தவர் சேகர்.இவர் இறந்து விட்டார். இவரது மனைவி பிரேமலதா (வயது 28) இவர் நேற்று காலை 8:30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு ஆர் .எஸ் . புரத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டார் மதியம் 2 – 30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவின்பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 பவுன்தங்க நகைகள் பண ரூ 10 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்று விட்டனர் . இது குறித்து பிரேமலதா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.