போதை மாத்திரைகளுடன் அண்ணன் , தம்பி கைது..!

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா ,சப் இன்ஸ்பெக்டர் , அய்யா சாமி ஆகியோர் நேற்று மாலை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தின் பின்புறம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 120 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாத்திரைகளும் அவர்கள் வைத்திருந்த 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.. விசாரணையில் அவர்கள் சென்னை கே.கே. நகர், நேசம்பாக்கம், பாரதிநகரை சேர்ந்த எட்வர்ட் மகன் ஜீவானந்தம் (வயது 17) இவரது தம்பி செல்வரத்தினம் ( வயது 16) என்பது தெரிய வந்தது . இவர்கள் இருவரும் வெல்டிங் தொழில் செய்து வந்தனர். அண்ணன் -தம்பி ஆவார்கள்..இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.