மொபட் மீது கார் மோதல் – முதியவர் பரிதாப பலி..

கோவை அம்மன் குளம், நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் செல்வன் (வயது 62) இவர் நேற்று புலியகுளம் – ரெட்பீல்டு ரோட்டில் மொபட்டில் சென்றார். அங்குள்ள பள்ளிக்கூடம் முன் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது மொபட் மீது மோதியது . இதில் செல்வன் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் . இது குறித்து அவரது பேத்தி கோமதி கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தங்கமணி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார் . இது தொடர்பாக கார் ஓட்டி வந்த ராமநாதபுரம் பங்கஜா மில்ரோட்டை சேர்ந்த குணசீலன் ( வயது 81 ) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ..