இணையதளம் மூலமாக பணமோசடி செய்தவர்களிடமிருந்து காவல்துறையினரால் 4 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையத்தில் ராமகிருஷ்ண பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கைபேசிக்கு முகம் தெரியாத நபரின் போன் கால் ஒன்று வந்துள்ளது. அந்த நபர் ராமகிருஷ்ண பிரபுவிடம் அதிக முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை ...
நாகப்பட்டினத்தில் இருந்து கடல் அட்டைகள், சுறா மீன் இறக்கைகள், கடல் குதிரைகள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக நாகை கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் நாகை அக்கரைப்பேட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் நாகை அக்கரைபேட்டை மாரியம்மன்கோயிலுக்கு தென்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள பழைய ...
மதுரை மாநகராட்சியில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வரி வசூலிக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. வரி வசூல் விவகாரத்தில், முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில், 2010ம் ஆண்டு முதல் 2022 வரை, வசூல் செய்யப்பட்ட வரித்தொகை மற்றும் நிலுவையில் உள்ள தொகை விவரங்களை ...
டியூசன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகள் அல்லது சென்டர்களில் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்அப் எண் உருவாக்கி விளம்பரப்படுத்தவும் ஆணை ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ராமநாதபுரத்தில் அருள்மிகு. பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் நேற்று இரவு யாரோ கோவில் முன் கதவு பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர் .அந்த நேரத்தில் காவலாளி வந்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து காவலாளி ரத்தினம் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு, கோடங்கிபட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் ( வயது 20) டிரைவர். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-1 மனைவியை காதலித்தார். அப்போது விக்னேஷ் ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் மாணவியை ஆனைமலை, டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட ...
கோவை தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள புல்லாகவுண்டன் புதூரில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவது தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது சேவல்சண்டை நடத்தி சூதாடியதாக மாதம்பட்டி ராஜ் (வயது 52)தொண்டாமுத்தூர் குமரேசன் (வயது 32)சுண்டப்பாளையம் குணசேகரன் ( வயது 50) மத்துவராயபுரம் வீராசாமி ...
குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் மாணிக்கம். 62 வயதான இவர் கரூரைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவரிடம் கடந்த ஆண்டு 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்தும் விதமாக மாணிக்கம், வங்கி காசோலை ...
திருவனந்தபுரம்: கேரள காவல்துறையில் பெண் போலீசார், உயரதிகாரிகளின் பாலியல் கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர் என்று, ஓய்வுபெற்ற பெண் டிஜிபி ஸ்ரீலேகா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள காவல்துறையில் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்று பெயர் பெற்றவர் ஸ்ரீலேகா. குற்றப்பிரிவு ஐஜி, போலீஸ் பட்டாலியன் ஏடிஜிபி, சிறைதுறை டிஜிபி உள்பட பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர். ...
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம், வெளிநாட்டு கரன்சி பிடிப்பட்டது. இது தொடர்பாக 6 ேபரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு துபாய் விமானம் வந்தது. பின்னர் அந்த விமானம் ஐதராபாத்துக்கு செல்ல வேண்டும். எனவே, விமான ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது, ஒரு சீட்டுக்கு அடியில் ...