சென்னை புறநகர் இரயல்களில் பாதுகாப்பிற்காக போலீசார் பயணம் செய்வது போல், இரவு நேர பஸ்களில், போலீசாரை பணியமர்த்தும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, சென்னை மாநகர போலீஸ் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னையில் ஆங்காங்கே சில குற்றச்சம்பங்கள் நடைபெறுகின்றன. அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளை ...

அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சொத்துவரி குறைவு எனவும் விளக்கமளித்துள்ளது. சொத்து வரி உயர்வால் அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் 1,200 சதுர அடிக்கும் ...

தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்தில் மக்களின் தேவைகளை பொறுத்து மட்டுமே ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. குறிப்பாக முன்பதிவில்லாத பயணிகள் ரயில், முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனையடுத்து மீண்டும் ரயில் சேவைகளை கொரோனாவிற்கு முந்தைய நேர அட்டவணைப்படி இயக்க ...

தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து பெண்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பெண்களுடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான பிரத்தியேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ...

தமிழ்நாட்டில் வரும் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 50 இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 300 பகுதிநேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. அதேபோல் 2000க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. . தீப்பெட்டி உற்பத்திக்கு மூலப்பொருட்களாக ...

தமிழகத்தில் பேருந்து சேவை வழங்கப்படாத கிராமங்களை கண்டறிந்து விரைவில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று உயர் அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் புதன்கிழமை பொறுப்பேற்ற நிலையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனைப் போலவே சென்னையில் தேவைக்கேற்ப சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ...

நீதிமன்ற உத்தரவை மதிக்காவிடில் சிறை தண்டனையே பிரதானமாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனையே பிரதானமாக இருக்க இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காத செயல் என்பது பணியில் நேர்மையுடன் செயல்படாததை காட்டுகிறது என்றும் அரசு பதவியை, லஞ்சம் ...

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம், இன்று நள்ளிரவு முதல் உயர்கிறது. பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து சுங்க கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கீழ் உள்ள சாலையின் சுங்கச்சாவடிகளில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயரும் என, மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. இதன் ...

டெல்லி: இலங்கையில் சீனா செயல்படுத்த இருந்த மின் உற்பத்தி திட்டங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இந்தியா- இலங்கை இடையே கையெழுத்தானது. பிம்ஸ்டெக் எனப்படும் வங்கக்கடல் பகுதி நாடுகளின் கூட்டம் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க இலங்கை சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இலங்கையில் தமிழர்கள் அதிகம் ...

தொடர்ந்து 10 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. ஆயினும் சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக 5 மாநில சட்டப்பேரவை ...