கோவை பி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாமோதிரன் (52). இவர் தனது மாருதி காரில், மாலை ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த போது திடிரென அவரது காரின் முன் பகுதியில் இருந்து திடிரென புகை கிளம்பியுள்ளது. காரை நிறுத்துவதற்குள் அதிகளவு புகை கிளம்பிய நிலையில், காரில் இருந்த தாமோதிரன் உடனடியாக வெளியே வந்தார். ...

சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய அணிகள் தொடர் வெற்றி பெற்று உலக நாடுகளை வாய்பிளக்க செய்துள்ளது. உலக அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு சென்னை மகாபலிபுரத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் முதல் சுற்றில் விளையாடிய இந்திய அணிகள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றன. ...

டெல்லி: நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 2-ந் தேதி முதல் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை சமூக வலைதளப் பக்கங்களில் முகப்புப் படமாக தேசிய கொடியை வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி தமது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று நாட்டு மக்களிடையே பேசியதாவது: தேசத்தின் 75-வது ...

தமிழ்நாடு காவல்துறையிடம் ஜனாதிபதி கொடி நேற்று  ஒப்படைக்கப்பட்டது. சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடியை ஒப்படைத்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு. அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த நிலையில், நேற்று  ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ...

தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எல்லாம் தங்களுக்கென்று செய்திச் சேனல்களை வைத்திருப்பதைப் போல தங்களுக்கும் ஒரு சேனல் வேண்டும் என்பது தமிழக பாஜகவின் நீண்ட நாளைய கோரிக்கை. பொன்னார் மாநில தலைவராக இருந்தபோதே இதற்காக சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், ஏனோ அப்போது அது கைகூடவில்லை. இப்போது அதற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறதாம். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ...

கோவையில் விதவிதமாக விற்பனையாகும் கஞ்சா: சாக்லெட்டுகள் பறிமுதல் கோவை ரத்தனபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் கஸ்தூரி தலைமையிலான போலீஸ் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது சங்கனூர் பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை சோதனை செய்தனர். சோதனையில் வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாக்லெட்டுகளை பார்த்து உள்ளனர். அந்த சாக்லெட்டை ...

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு உத்தவ் தாக்கரேயும், அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டேயும் தங்களுக்கு ஆதரவாளர்களை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருவரும் தங்களது அணியை உண்மையான சிவசேனாவாக தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கவேண்டும் என்று கோரி மனுக்கொடுத்துள்ளனர். இதையடுத்து வரும் 8-ம் தேதிக்குள் இரண்டு அணிகளும் தங்களது ஆதரவாளர்கள் பட்டியலை கொடுக்கவேண்டும் என்று ...

திருவாருர் அருகே காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக காவிரி டெல்டா பகுதி மக்கள் குற்றம்சாட்டி தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, 2020ம்ஆண்டு அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட ...

அதிமுக பல அணிகளாக பிரிந்து கிடக்கின்றன. சசிகலா அணி, டிடிவி தினகரன் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என்று அதிமுக பல அணிகளாக பிரிந்து இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் இவர்களை யாருமே பிடிக்காத இவர்களால் அதிருப்திக்குள்ளாகி இருக்கும் எம். ஜி. ஆர் ஆதரவாளர்கள் அணி ஒன்றும் உள்ளது. இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ‘ஒன்றிணைந்த ...

கடந்த 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக உளவுத்துறை முன்னாள் ஐ.ஜி ஜாபர்சேட்டுக்கு வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அப்போதைய வீட்டு வசதி வாரிய அமைச்சரும், தற்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் நேற்று முன் தினம் நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றது. கடந்த 2006-2011 திமுக ...