கோவை சாய்பாபா காலனி என். எஸ் . ரோட்டில் தனியார் சொந்தமான பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு ஆர்.எஸ்.புரம் சீனிவாச ராகவன் வீதியைச் சேர்ந்த ராமு ரெட்டி ( வயது 39) என்பவர் 319.9 கிராம் தங்க நகைகளை கொடுத்து பணம் கேட்டார்.அந்த நிறுவனத்தின் கிளை மேலாளர் ராஜசேகருக்கு அந்த நகைகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. ...

கோவை ரத்தினபுரி, கண்ணப்பன், நகர் புது தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துமணி. இவரது மகள் கனகவல்லி ( வயது 28) இவர் நேற்று தனியா டவுன் பஸ்சில் எருக்கம் பெனியில் இருந்து பூ மார்க்கெட்டுக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். பூ மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது அவரது கழுத்தில் அணிந்திருந்த18 கிராம் தங்கசெயினை காணவில்லை. ...

அகமதாபாத்: குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. 97க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும், கிராமபுறங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடக்கிறது. நேற்று முன்தினம் அதிகாலை பொடாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமம் மற்றும் சுற்றியுள்ள உள்ள கிராமங்களில் வசிக்கும் 100க்கும் ...

தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் சலுகை அளிக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் சுங்க கட்டணம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, தேசிய நெடுஞ்சாலை ...

இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வர இருக்கிறார். தமிழகத்தில் இன்று முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை ...

சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்துள்ளனர்.ஒவ்வொரு மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாத அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசையான இன்று (ஜூலை 28) முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த தர்ப்பணம் நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி ...

திருவனந்தபுரம் : முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு அடுத்த மாதம் முதல் ஆன்லைன் டாக்சி சேவையில் களம் இறங்க உள்ளது. நாடு முழுவதும் ஓலா, ஊபர் உள்ளிட்ட தனியார் கால் டாக்சி நிறுவனங்கள் ஆன்லைன் டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக கேரள அரசு சார்பில் இ – ...

எட்டாம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவனுடன் காதல் கொண்ட எதிர்வீட்டு 28 வயது திருமணமான பெண், கணவனை விட்டு அந்த மாணவனை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார் . அந்த மாணவனின் பெற்றோரும் உறவினரும் தேடி போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் இருக்கும் குட்மென் பேட்டையைச் ...

தமிழகத்தின் விருதுநகரைச் சேர்ந்த 17 வயது 11 ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சிறுமி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். முன்னதாக, தமிழகத்தில் ஜூலை 13ஆம் தேதி முதல் 11ஆம் வகுப்பு படிக்கும் ...

தமிழ்நாட்டில் வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம் முதலியவை உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் கட்டாயத்தால்தான் இந்த வரி, கட்டண உயர்வு நடத்தப்பட்டிருப்பதாக திமுக அரசு சார்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னையில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, அதிமுக-வினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ...