கோவை-சேலம், பாலக்காடு, சொர்ணூர் இடையிலான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சொர்ணூர்-கோவை இடையிலான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்: 06804), சொர்ணூர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று முதல் பிற்பகல் 3.30 மணிக்கு ...

கோவை சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசால் பாவேந்தர் பாரதி தாசன் விருது பெற்ற செந்தலை கவுதமனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்ற உள்நாட்டு போராட்டத்தை பார்க்கும்போது தமிழர்களை ...

கோவை மாநகர கோலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பொருப்பேற்றது முதல் பல்வேறு களப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சாலை போக்குவரத்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். அதே போல பள்ளி கல்லூரி உரிமையாளர்களுடன் கலந்துறையாடல், மக்கள் குறை தீர்ப்பு முகாம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக கோவை ...

கோவை பெரியநாயக்கன் பாைளயம் அடுத்த அறிவொளி நகர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா ...

கோவை போத்தனூர் நூராபாத்,சர்தார் சாகிப் வீதியைச் சேர்ந்தவர் அப்துல் கரீம். இவரது மனைவி ஆயிஷா( வயது 45 )இவர்களுக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. 2மகள்கள் உள்ளனர்.நேற்று இவர் பக்ரீத் பண்டிகையை ஒட்டி வீட்டில் உள்ள சிலிண்டர் அடுப்பில் பிரியாணி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சிலிண்டரில் இருந்து குபீர் என்று தீ பிடித்தது.இதில் ...

கோவை சூலூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் கன்னடாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (40). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று கவிதா தனது தாயாருடன் அருகில் உள்ள தோட்டத்துக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது ஒரு ஆடு மட்டும் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்றது. அந்த ...

அதிமுக பொதுக்குழுவில் வரவு – செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அனைவரும் எழுந்து நின்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வரவு செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ...

அதிமுக பொதுக்குழு நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு மேடை ஏறினார். அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானரகத்தில் நடைபெற்று வருகிறது. 9.15 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில் 9 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் பொதுக்கழு நடத்த நீதிபதி அனுமதி வழங்கி ...

அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்மகன் உசேன் தலைமையில்,செயற்குழு கூட்டம் நடைபெற்றது.அதில், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்த விவாதம் மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில்,அதிமுக ...

அதிமுக பொதுக்குழுவை இன்று நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்ததை அடுத்த, பொதுக்குழுவும் செயற்குழுவும் தற்போது தொடங்கியுள்ளது. இதில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கு, இன்று காலை 9 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ...