வேலூர்: மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எந்தவிதமான தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வேலூர் கோட்டை மைதானத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 30,423 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முடிவுற்ற பணிகளுக்கான திறப்பு விழா மற்றும் புதிய திட்டங்களுக்கான தொடக்க விழா இன்று ...

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக பல்வேறு சட்ட போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மட்டும் நம்பிக்கையின் உச்சத்தில் இருக்கிறதாம். எடப்பாடி பக்கம் எவ்வளவு ஆதரவாளர்கள் இருந்தாலும், அவரால் பொதுச்செயலாளர் பதவியை பெற முடியாது என்ற தீவிர நம்பிக்கையில் ஓ பன்னீர்செல்வமும், அவரின் ஆதரவாளர்களும் உள்ளனராம். ஒரு சேருக்கு நீண்ட நேரமாக ...

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்களின் மீதான எண்ணிக்கை இன்று மாலை வெளியாகும். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறும் ...

மதுரை: நாகர்கோவில் காசியின் லேப்டாப், மொபைலில் 400 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக சிபிசிஐடி கூறியது அதிர்ச்சியளிக்கிறது என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். நாகர்கோவில் காசியிடம் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர். இன்னும் பல சாட்சிகளை போலீஸ் விசாரிக்க வேண்டி உள்ளதால் ...

கோவை: மக்கள் கூடும் இடங்களில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள மாநகராட்சி நிர்வாகம், ‘மாஸ்க்’ அணியாதவர்களிடம் இருந்து இதுவரை, 2.30 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது; ‘கன்ட்ரோல் ரூம்’ மீண்டும் திறந்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.தற்போது, ‘மாஸ்க்’ கட்டாயமாக்கப்பட்டும் ...

வேலூர்: சனாதன தர்மத்தை கடைபிடிப்பதன் மூலமே பாரம்பரிய கலாச்சாரத்தையும், புவியில் உள்ள உயிர்களையும் காக்க முடியும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் 5 நாள் நடைபெறும் பாலாறு பெருவிழாவையொட்டி அகில பாரதிய சன்யாசிகள் சங்க மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் ...

சென்னை: எடப்பாடி பழனிசாமி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அவருக்கே பலவிதமான சறுக்கல்களை தந்து வருகிறதாம்.. அத்துடன் இவையெல்லாம் ஓபிஎஸ்ஸூக்கும் பிளஸ் பாயிண்ட்களாகவே அமைந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதரவாளர்கள் மொத்தமாக தனக்கு சப்போர்ட்டுக்கு உள்ள நிலையில், ஓபிஎஸ்ஸை பல்வேறு வகைகளில் நிராகரித்தது எடப்பாடி டீம். எப்படி பார்த்தாலும், ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்றே கருதப்பட்ட நிலையில், ...

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஸ்ரீதர் என்பவர் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பில் புகார் அளித்தனர். புகாரின் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். ...

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததையடுத்து, முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் நாளை முதல்வராக பதவியேற்கிறார் என தகவல். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இதனால் ...

முதலமைச்சர் முக ஸ்டாலின் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க நேற்று முன் தினம் சென்னையிலிருந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த ராணிப்பேட்டை ரூ. 118.40 கோடியில் பல வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ...