கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். மிகுந்த பதற்றத்துடன் பேசிய அந்த பெண் தன்னை கணவர் அடித்து தாக்கி கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் பூட்டி வைத்துள்ளதாகவும், தன்னை அவர் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்தார் . இதை கேட்டு ...

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனம் ஜிஎஸ்டி ரீதியான சில குழப்பங்களுக்காக அந்த மாநில உயர் நீதிமன்றத்தை நாடியது. அந்த நிறுவனத்தின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர… மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்துவதல்ல” என்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில் ...

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு செல்லிடப்பேசி வாயிலாக முத்தலாக் கொடுத்த கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் குன்குரி காவல் நிலையத்தில் முத்தலாக் தடைச் சட்டப் பிரிவு 4-கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. “தனது கணவர் செல்லிடப்பேசி வாயிலாக முத்தலாக் கொடுத்ததாக ஒரு பெண் புகார் அளித்தார். 2007இல் இஷ்தியாக் அலாம் ...

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் அறப்போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட மாநில காங்கிரஸ் ...

புதுச்சேரி: புதுச்சேரியில் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் பாஜகவை பலப்படுத்த மாற்றுக்கட்சியினரை அதிகளவில் இழுக்குமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாம். இதனால், பாஜகவினரும் தி.மு.க, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சியினருடன் மட்டுமல்லாமல், அ.தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளிடமும் கட்சியில் சேர மறைமுகமாக பேசி வருவதாக ...

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 5 மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ...

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், 7 பேர் பலியாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், 2,02,385 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். கேட்சர், சரேடியோ, ...

டெல்லி: மொபைல் போன் ஏற்றுமதியில் புதிய உச்சம் படைத்துள்ளோம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டிராய் அமைப்பின் வெள்ளி விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 5ஜி தொழில்நுட்பம் நமது நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 450 பில்லியன் டாலர் பங்கு வகிக்கும் என்றும் 10 ஆண்டுகள் நிறைவில் 6ஜி சேவைகளை தொடங்க ...

சென்னை துறைமுகத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி மக்கள் போராட்டங்கள் நடத்தியதால் இலங்கை கலவர பூமியாக மாறியது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக ...

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மீது செவ்வாய்க்கிழமை கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது. இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததையடுத்து, அதிபா் ...