சென்னை: கீழடி அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானம், தொல்பொருட்கள் நேர்த்தி ஆகியவை முதிர்ச்சியான நாகரீகத்துக்கு சான்றாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அறிவியல்வழி ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் அளித்த அறிக்கையில், மாண்புமிகு ...

காதல் மனைவி மும்தாஜ் மறைவையடுத்து, அவரது நினைவாக இந்த தாஜ்மகாலை முகலாய பேரரசர் ஷாஜகான் கட்டியுள்ளார். நினைவு சின்னங்களில் ஒன்றாக திகழும் தாஜ் மகாலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இது மிகவும் விலை உயர்ந்த பளிங்கு கற்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. திபெத் மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கற்கள் ...

கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு தாம் தயாராக இருப்பதாக மகிந்த ராஜபக்சே சூசகமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவின் 2-வது மகன் யோஷித ராஜபக்சே, மனைவியுடன் இலங்கையைவிட்டு வெளிநாடு ஒன்றுக்கு இன்று காலை தப்பி ஓடிவிட்டதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதி உச்சத்தில் இருப்பதால் மக்கள் தொடர் ...

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் மதியம் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால், தென்கிழக்கு வங்கக்கடலில் ‘அசானி’ புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அசானி புயல் தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து ...

சென்னை: நிலக்கரி தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் இருந்து 4.80 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட உள்ளது. வரும் 15-ம் தேதி முதல் தமிழகத்துக்கு இந்த நிலக்கரி வரும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 2.29 கோடி வீட்டு மின் இணைப்புகள், 34 லட்சம் வர்த்தக இணைப்புகள், தொழிற்சாலைகளுக்கு 7.50 லட்சம் ...

கோவை : கோவையில் கஞ்சா போதையில் பொதுமக்களை அரிவாளால் துரத்தி துரத்தி வெட்டிய 5 இளைஞர்களை பிடித்த பொதுமக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பிரூடி காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இவர் தனது வீட்டருகே இளைஞர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதிலுள்ள ...

திமுகவின் தீவிர கொள்கை பிடிப்பாளரான மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பா.ஜ.கவில் இணைந்துள்ளார். திமுக தலைமை மீது கடந்த சில வருடங்களாகவே அவர் அதிருப்தியில் இருந்துள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மனு அளித்தபோதும் அவருக்கு திமுக வாய்ப்பு வழங்கவில்லை. கட்சியில் மூத்த நிர்வாகிகளாக இருக்கும் பல தலைவர்களின் மகன்களுக்கு எம்.எல்.ஏ ...

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அதைத் தொடர்ந்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். பின்னர், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு ...

திமுக அரசு ஓராண்டு நிறைவு செய்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்றார். கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ...

அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அங்கு சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி உணவு பொருட்கள் வரை அனைத்தின் விலையும் பல மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த ...