கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் கோவையில் 41 இடங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 58 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.தொடர்ந்து கோவை விளாங்குறிச்சியில் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெயராம் வீடு உள்ளது. இவரது வீட்டிலும் இன்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது. ...

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடகாவில் அரசுப்பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கும் சூழல் ஏற்பட்டது. ஹிஜாபுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்வா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் காவி துண்டு ...

தமிழகத்தில் 2022 – 23 பருவத்திலிருந்து டிகேஎம் 9 நெல்லினை கொள்முதல் செய்வதை கைவிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக நெல் கொள்முதலில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சில இடங்களில் டிகேஎம்9 சாகுபடி ...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க தான் வெற்றி பெற்றது. அதனை மாற்றி விட்டனர். இதனை மறைப்பதற்காக லஞ்ச ஒழிப்பு துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். கோவைக்கு மிகப்பெரிய சக்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி முடியாது என்பது தற்போதுள்ள அமைச்சர்களுக்கு தெரியும். அதை உடைப்பதற்காக இதுபோன்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். ...

கோவை : கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணிக்குசொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்குச் நெருங்கியவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்றது. இந்த ...

திருவண்ணாமலை : ”தமிழகத்தில், கொரோனா நான்காவது அலை வர வாய்ப்புள்ளது. மக்கள் ஓரிரு மாதங்களுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைப்பிடிக்க வேண்டும்,” என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.திருவண்ணாமலை அடுத்த கண்ணக்குறுக்கை கிராமத்தில், புதிய துணை சுகாதார நிலைய கட்டடத்தை துவங்கி வைத்த அவர் கூறியதாவது: ஜூனில் கொரோனா நான்காவது அலை வர வாய்ப்புள்ளது என, ...

மதுரை : “ஆகஸ்ட்டில் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும். இத்திட்டம் வெற்றி தரும்” என இஸ்ரோவின் (வி.ஏ.எல்.எப்.) துணை இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.மதுரை குயின்மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், இஸ்ரோ செயல்பாடுகள் குறித்து விளக்கினார். அவர் பேசியதாவது:சாமானியர்களுக்கு பயன்படும் வகையில் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளவேண்டும். இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் ஆராய்ச்சியில் ஈடுபட ஆர்வம் ...

சாலைகளில் 15 வருடங்களுக்கு மேல்பழமையான வாகனங்கள் பயணிப்பதால்தான் காற்றுமாசு அதிகமாகிறது என புகார்கள் வருகிறது. இந்த புகாரின்படி 15 வருடங்கள் பழசான வாகனங்களை அழிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது இதற்கான பழைய வாகனங்களின் பதிவு புதுப்பித்தலுக்கான கட்டணத்தினை அதிகரித்து இருக்கிறது. சர்வதேச அளவில் காற்றுமாசு அதிகமாக உள்ள நாடுகளில் ...

மக்களுக்கு குறைந்தவிலையில், தரமான மருந்துகளை, வழங்கி வரும் பிரதம மந்திரி மக்கள் மருந்துகத்தில் இனிமேல் மக்கள் உடல்நலனை ஊக்குவிக்கும் புரோட்டீன் பவுடர், சத்துமாவுகள், நோய்எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள், சத்துமாவு சார்ந்த பொருட்களும் கிடைக்கும். தற்போது நாடு முழுவதும் பிரதம மந்திரி பாரதிய ஜன்அவுஷதி பாரியோஜனா எனப்படும் பிரதமரின் மலிவுவிலை மக்கள் மருந்தகத்தில் 1451 வகையான மருந்துகள், ...

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் அதன் பதிவாளர் தாக்கல் செய்த மனுவில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவலை தமிழில் தர ஐகோர்ட்டுக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தான் உள்ளது. எனவே, ஆர்டிஐ தொடர்பான கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தான் பதிலளிக்க முடியும். எனவே, தமிழில் பதில் ...