தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 18ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் பணிகள் நிறைவடைந்து அவை பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் ...

ஐ.நா வின் பாதுகப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வடகொரியா 7 முறை ஏவுகணை சோதனையினை நடத்தியுள்ளது. சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளின் எதிரொலியினால் வடகொரியாவின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து உள்ளது. இப்படி பட்ட சூழ்நிலையிலும் வடகொரியா ...

இந்திய தொழில் அதிபர் கௌதம் அதானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.   கௌதம் அதானி (Gautam Adani) என்ற இந்திய கோடீஸ்வரர், சிறு நிலையில் தொடங்கப்பட்ட வர்த்தகத்தை, மிகப்பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக, துறைமுகங்கள், சுரங்கங்கள் மற்றும் பசுமை எரிசக்தி ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டு நிறுவனமாக மாற்றியுள்ளார். இப்போது ஆசியாவின் பணக்காரராக ...

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கர்நாடக எம்.பி கேள்வி எழுப்பிய நிலையில், மத்திய அமைச்சர் அஸ்வினி சௌபே, தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே சுமுக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமலேயே மேகதாது ...

காங்கிரஸ் இல்லையென்றால் வாரிசு அரசியல் இருந்திருக்காது. காங்கிரஸ் கட்சியின் பெயரை பெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ் என மாற்றிக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி பேச்சு. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான ஜனவரி 31-ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை ...

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. லவ் ஜிகாத்துக்கு 10 ஆண்டுகள் சிறை; 1 லட்சம் ரூபாய் அபராதம், ராமாயண பல்கலைக்கழகம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி ...

தமிழகத்தை பாஜக ஆளவே முடியாது என்றார் ராகுல்.. 67க்குப் பிறகு நீங்களே தமிழகத்தை ஆளவில்லையே என்று பதிலடி தந்துள்ளார் மோடி.. நாடாளுமன்றம் வாதப் பிரதிவாதங்களால், தமிழ் சினிமா நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி போல பரபரக்கிறது..! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உரை நிகழ்த்திய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உணர்ச்சி மயமான தனது பேச்சால் இந்தியாவையே ...

வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கிளப்களில் நேரடியாக காவல் துறையினர் சோதனை நடத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.   சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் எம்.எம். நகர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு விடுதி, சென்னை வடபழனி ஃபைவ் ஸ்டார் கிளப் ஆகியவை தொடர்ந்திருந்த வழக்கில், தங்கள் விடுதிகளின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது எனக் ...

நாம் தமிழர் கட்சி சிறிய கட்சியாக இருக்கும்போது அதன் வேட்பாளர்களை கடத்துவது ஏன் என்றும் வேட்பாளர்களின் உறவினர்களை மிரட்டுவது ஏன் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்திம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ...

கோவை : கோவையில் பணியாற்றிய பெண் நீதிபதி, ஊழல் புகாரில் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.கோவையில், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவராக பணியாற்றி வந்தவர் உமாராணி. 2016 – 2018 வரை, கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.அப்போது, பல்வேறு வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை திருத்தம் செய்து, லஞ்சம் பெற்று, ஒரு தரப்புக்கு சாதகமாக ...