சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பிப்ரவரி ...
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. மாநில மகளிர் தொண்டர் அணியின் துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் மீனா ஜெயக்குமார். இவர் சமீபத்தில் அந்த மாவட்டத்தில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் முன்னிலையில் அவரது மனைவிக்கு எதிராக முரண்பட்ட கருத்துக்களை கூறியது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தி.மு.க. தலைமை அவரை கட்சியில் ...
சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக் 3 வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக அக்கட்சியின் மா நிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்நிலையில், 8 மாவட்ட பாஜக தலைவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: பாஜக கட்சி ரீதியிலான நெல்லை, நாகை, சென்னை மேற்கு, வட சென்னை, ...
உத்தரபிரதேச மாநிலத்தில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ள நிலையில், 7வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையொட்டி மிர்சாபூரில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் ...
திமுகவில் சாமானியா்களும் மேயா், துணை மேயா் பதவிக்கு வரமுடியும் என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிரூபித்துள்ளாா். கோவை மாநகராட்சி மேயராக கல்பனா வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டாா். அவரது பதவியேற்பு விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி கலந்து கொண்டாா். இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக அரசின் 9 மாதத் திட்டங்களுக்கு மணிமகுடமாக இந்த ...
கோவை:கோவை மாநகராட்சியின் புதிய துணை மேயராக பதவியேற்ற வெற்றிச்செல்வன், தனது தாயை துணை மேயர் இருக்கையில் அமர வைத்து, அழகு பார்த்தார்.கோவை மாநகராட்சி பிரதான அலுவலகமான விக்டோரியா ஹாலில் மேயர், துணை மேயர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடந்தது. இதில், தி.மு.க., மேயர் வேட்பாளரான கல்பனாவும், துணை மேயர் வேட்பாளரான வெற்றிச்செல்வனும் போட்டியின்றி, ஒருமனதாக ...
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தமிழக நிதிநிலை குறித்து அவா் பேசியது:- பட்ஜெட் நிதிநிலை வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ...
சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் ...
சாலை விபத்துகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் காப்பீட்டு சான்றிதழில் சரிபார்க்கப்பட்ட செல்போன் எண்ணை இடம்பெற செய்வதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 25, பிப்ரவரி 2022 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், சாலை விபத்துகள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கான நடைமுறைகள் கட்டாயமாக்கப் படுவதாகவும், சாலை விபத்துகள் குறித்த விரிவான ...
இயற்கை பேரிடரை எதிர் கொண்ட தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு கூடுதல் நிதியாக 1,682 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகம், ஆந்திரா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு மொத்தம் 1,664.25 கோடி ரூபாயும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு 17.86 கோடி ரூபாயும் மத்திய அரசு தருகிறது. ...