பொள்ளாச்சி அருகேயுள்ள பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 44 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் மனுக்கள் பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் திங்கள்கிழமை மனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதி வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை இரவு ...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில், வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி மற்றும் வாக்கு எண்ணும் நாளான 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி ...

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 18ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் பணிகள் நிறைவடைந்து அவை பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் ...

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கர்நாடக எம்.பி கேள்வி எழுப்பிய நிலையில், மத்திய அமைச்சர் அஸ்வினி சௌபே, தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே சுமுக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமலேயே மேகதாது ...

காங்கிரஸ் இல்லையென்றால் வாரிசு அரசியல் இருந்திருக்காது. காங்கிரஸ் கட்சியின் பெயரை பெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ் என மாற்றிக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி பேச்சு. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான ஜனவரி 31-ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை ...

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. லவ் ஜிகாத்துக்கு 10 ஆண்டுகள் சிறை; 1 லட்சம் ரூபாய் அபராதம், ராமாயண பல்கலைக்கழகம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி ...

தமிழகத்தை பாஜக ஆளவே முடியாது என்றார் ராகுல்.. 67க்குப் பிறகு நீங்களே தமிழகத்தை ஆளவில்லையே என்று பதிலடி தந்துள்ளார் மோடி.. நாடாளுமன்றம் வாதப் பிரதிவாதங்களால், தமிழ் சினிமா நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி போல பரபரக்கிறது..! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உரை நிகழ்த்திய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உணர்ச்சி மயமான தனது பேச்சால் இந்தியாவையே ...

நாம் தமிழர் கட்சி சிறிய கட்சியாக இருக்கும்போது அதன் வேட்பாளர்களை கடத்துவது ஏன் என்றும் வேட்பாளர்களின் உறவினர்களை மிரட்டுவது ஏன் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்திம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ...

கமுதி பேரூராட்சியில் உள்ள 11 வார்டுகளில் போட்டி இன்றி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரூராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளும் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வகைகள் உள்ளன. இந்த 15 வார்டுகளில் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ...

மக்களைத் தேடி வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்துவந்த திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தற்போது முதல்வரான பின் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேரடி பிரச்சாரத்தை கைவிட்டு ஆன்லைன் வழியாக பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.   முதல்வர் ஸ்டாலின் ஏன் நேரடி பிரச்சாரத்தை கைவிட்டு இந்த ஆன்லைன் பிரச்சாரத்தை தேர்ந்தெடுத்தார் என்பது ...