கோவை ஏப் 25
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 20 17- ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், சம் சீர் அலி ,மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் சி.பி.சி ஐ.டி.போலீசார் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் வீர பெருமாள் உட்பட 300 க்கு மேற்பட்டவர்களுக்கு சி.பி சி.ஐ.டி போலீசார் சம்மன்அனுப்பி கோவை உள்ள அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுதற்போது ஜாமினில் இருக்கும் கேரளாவை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். எனவே அவரை நேற்று ஆஜராக போலீசார் சமன் அனுப்பினர் .இதைத் தொடர்ந்து சயான் நேற்று கோவை வந்து காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நேரில் ஆஜரானார் அவரிடம் போலீஸ்சூப்பிரண்டு மாதவன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் சி.பி.சி ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர் கோடநாடு சம்பவம் நடப்பதற்கு முன்பும் ,பின்பும் அவரிடம் தொடர்பு கொண்ட நபர்கள் யார் 7டிஜிட் கொண்ட நம்பரில் இருந்து பேசி நபர்கள் யார்? அவர்கள் என்ன பேசினார்கள்? அதில் முக்கிய நபர்கள் யாராவது உள்ளார்களா? என்பது உட்பட 40 கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்தார். கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்கள் அனைத்து வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. மாலை 5 மணிக்கு விசாரணை முடிந்ததது. சயா னிடம் மொத்தம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்த பின்னர் அவர் சி.பி.சி.ஐ. டி. அலுவலகத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.