2 பேரிடம் தட்டி விட்டு செல்போன் பறிப்பு..!

Mothers hand is trying to get phone off her daughters hand. Representing phone usage rules for children.

கோவை : நேபாளத்தை சேர்ந்தவர் தீபக் (வயது 32 ) இவர் ஜி என் .மில். பகுதியில் குடியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். அங்குள்ள வெள்ள கிணறு பகுதியில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 3 ஆசாமிகள் இவரது செல்போனை தட்டி விட்டு பறித்து சென்று விட்டனர் .இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதே போல கோவை கவுண்டம்பாளையம் பி . அன்.டி . காலனி, ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 28) டிரைவர் கவுண்டம்பாளையம் கல்பனா தியேட்டர் அருகே செல்போன் பேசிகொண்டே நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக வந்த 2 ஆசாமிகள் இவரது செல்போனை தட்டி விட்டனர் . கீழே விழுந்ததும் அதை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து நாகராஜ் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.