அரசு டவுன் பஸ்சில் பெண்ணிடம் செயின் திருட்டு..!

கோவை செல்வபுரம் செட்டி வீதியைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகள் ரேவதி ( வயது 29 )இவர் நேற்று செட்டி வீதியில் இருந்து அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அவிநாசி ரோட்டில் அண்ணா சிலை அருகே பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது இவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் செயினை காணவில்லை. யாரோ ஓடும் பஸ்சில் திருடிவிட்டனர் .இது குறித்து ரேவதி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..