ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் செயின் திருட்டு..!

திருப்பூர் மாவட்டம் ,காங்கேயம் வெள்ளகோவில், கொங்கு நகரை சேர்ந்தவர் குமார் இவரது மகள் நிஷாந்தினி (வயது 20) இவர் வடகோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் எம் .எஸ் . சி படித்து வருகிறார் .சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இவர் காந்திபுரத்தில் இருந்து சாய்பாபா காலனிக்கு தனியார்  டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது யாரோ இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துவிட்டனர். இது குறித்து நிஷாந்தினி சாய் பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..