ஓடும் பேருந்தில் பைனான்ஸ் மேனேஜரிடம் செயின் திருட்டு..!

உடுமலையை சேர்ந்தவர் மணி (வயது 39) கோவை ராம் நகரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடுமலையிலிருந்து சேலத்துக்கு பஸ் சென்று கொண்டிருந்தார் . பஸ் சேலம் சென்றடைந்ததும் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் டாலர் செயின் காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இதுகுறித்து மணி காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.