காதலியை ஏமாற்றி கோவை லாட்ஜில் பலாத்காரம் – காதலன் கைது..!

கோவை ஒண்டிப்புதூர் கோபால் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகள் அபிநயா ( வயது 21) இவர் சிங்காநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் பாப்பம்பட்டி பிரிவு சந்தான லட்சுமி நகரை சேர்ந்த பழனியப்பன் மகன் நித்தியானந்தன் ( வயது 24 )என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் நித்யானந்தன் அபிநயாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை காட்டி காந்திபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜ்க்கு அழைத்துச் சென்றாராம் .அங்கு வைத்து அவரை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.இதுகுறித்து அபிநயா நித்தியானந்தனிடமும் ,அவரது பெற்றோர்களிடமும் கூறினார். 3பேரும் சேர்ந்து அபிநயாவை மிரட்டினார்களாம்.இது குறித்து அபிநயா கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர்காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ருக்மணி வழக்கு பதிவு செய்து அபிநயாவின் காதலன் நித்யானந்தனை கைது செய்தார்.இவரது தந்தை பழனியப்பன் தாய் நவுயா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.