கோவை குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் , பெரியசாமி வீதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவரது மகன் அன்வர் பாட்ஷா ( வயது 25 )இவரும் குனியமுத்தூர் அனுப்பர்பாளையம் குழந்தை கவுண்டர் வீதியை சேர்ந்த பயாஷ் அகமது (வயது 27) ஆத்துப்பாலம்,போத்தனூர் ரோடு வெங்கடேஸ்வரன் ( வயது 25) ஆகியோர் புத்தாண்டு தினத்தன்று மது குடித்துவிட்டு புத்தாண்டு கொண்டாடினார்கள். அப்போது விக்னேஸ்வரன் அன்வர்பாஷாவை பிடித்து கீழே தள்ளினார். இதனால் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது .இது தொடர்பாக கேட்டபோது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயாஷ் அகமது, வெங்கடேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து அன்வர்பாட்சாவை மது பாட்டிலால் குத்தினர்களாம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அன்வர் பாட்ஷா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பயாஸ் அகமது, விக்னேஸ்வரன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்கள் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல் : வாலிபருக்கு மதுபாட்டில் குத்து – 2 பேர் கைது..!
