கோவையில் 57 மசாஜ் சென்டர்கள் மூடல் – போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் தகவல்.!!

கோவையில் விபசாரத்திற்காக ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் , வெளி மாநிலங்களில் இருந்தும் அழகிகளை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபசார கும்பல் தலைவன் சிக்கந்தர் பாட்ஷா (வயது 40) அவரது கூட்டாளி ஸ்டீபன் ராஜ் (வயது 35 )ஆகியோரை கோவை மாநகர போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. இவர்களிடம் மாமூல் பெற்ற நபர்கள் விபசார தொடர்பில் இருந்த நபர்கள் வாட்ஸ் அப் மூலமாக போட்டோ அனுப்பி இளம் பெண்களுடன் ஒட்டலில் தங்கிய பிரபலங்கள் குறித்து விசாரணை நடக்கிறது.

இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஸ்டாலின் கூறியதாவது:- விபசார கும்பலை வழி நடத்திய சிக்கந்தர் பாட்சா அவரின் கூட்டாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிக்கந்தர் பாட்ஷா விடம் 16 செல்போன்கள் இருந்தன . அந்த செல்போன்களை அவரது கூட்டாளிகள் சிலர் பயன்படுத்துவதாக தெரிகிறது. போலீசுக்கு பயந்து அவர்கள் தலைமறைவாகி விட்டார்கள். பெங்களூர் ,மும்பை ஐதராபாத் உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு இளம் அழகிகளின் போட்டோ விவரங்களை அனுப்பி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. விபசார கும்பலை சேர்ந்தவர்கள் கோவை நகருக்குள் வருவதில்லை. ஆனால் வெளி மாநிலத்தில் தங்கி விவரங்களை அனுப்பி ஆன்லைன் மூலம் பணம் வாங்கி இளம் பெண்களை ஓட்டலுக்கு அனுப்பி விபச்சார தொழில் செய்கிறார்கள். இந்த கும்பல் நட்சத்திர அந்தஸ்து உள்ள ஓட்டல்களை தான் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர் .இந்த கும்பலில் 4 முதல் 6 பேர் இருக்கலாம். இவர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் தீவரம் காட்டி வருகிறார்கள் .நகரில் மசாஜ் சென்டர், “ஸ்பா ” போன்றவற்றில் விபசாரம் செய்வதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் உள்ளனர். மேலும் விபசாரத்தை தடுக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக நகரில் செயல்பட்ட 57 மசாஜ் சென்டர்கள் மூடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்..