சேவல் சண்டை சூதாட்டம் – 7 பேர் கைது..!

கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள ஆலம்பாளையம் இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக நெகமம் போலீசுக்கு தகவல் வந்தது.சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக பெரிய கவுண்டனூர் முத்துசாமி ( வயது 50) டி கோட்டம் பட்டி காளிமுத்து( வயது 25) மீனாட்சிபுரம் தமிழரசு ( வயது 21 ) கோபால்சாமி ( வயது 28) ரமேஷ் குமார் (வயது 34) தினேஷ்குமார் (வயது 25) பொள்ளாச்சி சேர்மன் வீதி கதிர்வேல் (வயது25 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சூதாட பயன்படுத்தப்பட்ட 2 சேவல்கள், ரூ.1500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.