சுடுகாட்டில் சேவல் சண்டை சூதாட்டம் – 6 பேர் கைது..!

கோவை சிங்கநல்லூர் கள்ளிமடை பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சிங்காநல்லூர் ராஜலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (45) தங்கவேல் ( 42 )சிட்கோ நாகராஜபுரம் சுரேஷ் ( 49 )கள்ளிமடை கருப்புசாமி ( 38 ) விக்னேஸ்வரன் ( 32 ) மனோஜ் குமார் ( 20 ) ஆகியோரை கைது செய்தனர். 2 சேவல்களும், சூதாட பயன்படுத்தப்பட்ட ரூ 7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.