மேட்டுப்பாளையத்தில் சேவல் சண்டை சூதாட்டம் – 3 பேர் கைது.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ரோட்டில் உள்ள தண்ணீர் டேங்க் அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முகமது முஸ்தபா (வயது 32 ) சமயபுரம் அன்னூர் பாட்ஷா ( வயது 29) அண்ணாஜி ராவ் ரோடு நசீர் அஹமத் (வயது 45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சூதாட பயன்படுத்தப்பட்ட சேவலும் ,பணமும் பறிமுதல் செய்யப்பட்டது..