கோவை வங்கி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை..

கோவை பேரூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூ ரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 55) இவர் பொள்ளாச்சியில் உள்ள ஸ்டேட் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் உடல்நல குறைவின் காரணமாக லீவு போட்டு வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சத்தியமூர்த்தி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி வீரமணி பேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.