கோவை தொழிலதிபர் வீட்டில் பூட்டை உடைத்து 43 பவுன் நகை,பணம் கொள்ளை – மர்ம நபர்கள் கைவரிசை.!!

கோவை பீளமேடு, சேரன்மாநகரை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மகன் மோனிஷ் ராஜன் ( வயது 27 )வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.இவர் திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார் .கடந்த 3ஆம் தேதி மோனிஷ் ராஜனும், அவரது தாயாரும் வீட்டை பூட்டிவிட்டு தாராபுரத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 43 பவுன் தங்க நகைகள், ரூ 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து மோனிஷ் ராஜன் பீளமேடு போலீ சில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தமிழரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..