விஷம் குடித்து கோவை தொழிலதிபர் தற்கொலை..

கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகர் ,ஆர். ஜே. நகரை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 43) “மாப் ஸ்டிக் ” தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதனால் தொழிற்சாலையை மூடிவிட்டார். இந்த நிலையில் துபாய் சென்று வேலை பார்க்க விரும்பினார். ஆறு மாதமாக தேடியும் வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது மனைவி ஸ்ரீஜா ரத்தினபுரி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.