கோவை மத்திய சிறை கைதி திடீர் மரணம்..

கோவை சத்தி ரோடு, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 42) இவர் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த வழிப்பறி, கொலை முயற்சி  வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆம் தேதி முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு நேற்று சிறையில் வைத்து திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது . இதையடுத்து சிறை மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் . இது குறித்து ஜெயிலர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கோவை மத்திய சிறையில் கைதிகளின் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..