கோவை கல்லூரி மாணவி திடீர் மாயம்..!

திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி பட்டியை சேர்ந்தவர் முத்தையா . இவரது 17 வயது மகள் கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் கணபதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். 12-ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாயார் வளர்மதி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.