சவுக்கு சங்கருக்கு ஜாமீன்- கோவை கோர்ட்டு உத்தரவு.!!

கோவை ஆகஸ்ட் 17 போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர்,பெலிக்ஸ் ஆகியோரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .இந்த நிலையில் சவுக்கு சங்கர்,பெலிக்ஸ் ஆகியோர் சுதந்திரப் போராட்ட வீரரான பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவதூறாக பேசியதாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில் சவுக்கு சங்கர் மட்டும் கைது செய்யப்பட்டார். தற்போது மதுரை சிறையில் இருக்கும் அவர் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு கோவையில் உள்ள 3 -வதுமாஜிஸ்திரேட்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது .மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சரவண பாபு ,சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.