பெண்ணிடம் குறுமிளகு வாங்கி ரூ.14 லட்சம் மோசடி- கோவை வியாபாரி கைது.!

கோவை: சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர் தனலட்சுமி ( வயது 41) குறுமிளகு வியாபாரி. இவரிடம் கோவையை சேர்ந்த கருப்பசாமி என்பவர் ரூ. 14 லட்சத்துக்கு 2 டன் குறுமிளகு வாங்கினார்.  அதற்கான காசோலையை கொடுத்தார். அந்தக் காசோலையை வங்கியில் வசூலுக்கு போட்ட போது பணம் இல்லாமல் திரும்பியது .உடனே அவர் கருப்பசாமியிடம் தொடர்பு கொண்டு பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்காமல் மோசடி செய்தார். இது குறித்த புகாரின் பேரில் கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து  தலை மறைவாக இருந்த கருப்பசாமியை தேடி வந்தனர். இந்த நிலையில் கோவை சின்ன வேடம்பட்டியில் பதுங்கி இருந்த அவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது அதில் அவர் மீது ராமநாதபுரம், பீளமேடு, சாய்பாபா காலனி, சூலூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் 19 மோசடி வழக்குகள் இருப்பதும், கோடிக்கணக்கான பணம் பெற்று மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது.. இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.