கோவை சரக டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை குறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்ட 7 பேருக்கு சம்மன்.!!

கோவை சரக டி.ஐ.ஜியாக பணிபுரிந்து வந்தவர் விஜயகுமார் இவர் கடந்த 7-ந் தேதி கோவை,ரெட் பீல்டு பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் . மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாரின் உடல் தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு,போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி தற்கொலை குறித்து கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். .அவரின் உதவியாளர் முகாம் அலுவலகத்தில் இருந்தவர்கள் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் சிலர் டி .ஐ. ஜி தற்கொலை குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டனர். மேலும் யுடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். அதில் சிலர் உயர் அதிகாரிகள் கொடுத்த பணி அழுத்தத்தினால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்ட 7பேருக்கு கோவை மாநகர போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் தாங்கள் தெரிவித்த கருத்துக்கு தகுந்த ஆதாரங்களுடன் நாளை மறுநாள். (புதன்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது குறித்து மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கோவை சரக டி.ஐ.ஜி.தற்கொலகுறித்து சிலர் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் எந்த தகவலின் அடிப்படையில் இந்த கருத்துக்களை தெரிவித்தார்கள். அதற்கான ஆதாரத்துடன் நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பி உள்ளோம். இவர்களிடம் வருகிற 19ஆம் தேதி (புதன்) முதல் கோவை ராமநாதபுரம் போலீஸ்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்..