தூக்கிட்டு கோவை டாக்டர் தற்கொலை..

கோவை போத்தனூர் குறிச்சி பிரிவு, கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் அமானுல்லா ( வயது 73 ) இவர் மஸ்கட்டில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி நமுநிஷா (வயது 62)போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார் .சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.