கோவை நகை கடையில் ரூ.45 லட்சம் தங்க நகைகள் திருடிய ஊழியர் கைது..!

கோவை பெரிய கடை வீதியில் பி .எம் .என். ஜுவல்லரி என்ற பெயரில் நகை கடை நடத்தி வருபவர் பி. ஆர். கமலநாதன் ( வயது 42) இவரது கடையில் விளாங்குறிச்சி ரோடு ஜீவா நகரை சேர்ந்த சரவணன் வயது 40 என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நகை கடையில் இருந்த 660 கிராம் எடை கொண்ட தங்க கம்மல்கள், மோதிரங்களை திருடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 45 லட்சம் இருக்கும். இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார் . சப் இன்ஸ்பெக்டர் பாமா வழக்கு பதிவு செய்து நகை கடை ஊழியர் சரவணன் ( வயது 40 ) என்பவரை கைது செய்தார். இவரிடம் விசாரணை நடந்து வருகிறது..