கோவை இன்ஜினியர் வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு – 3 பேர் கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சின்னமத்தம் பாளையம்,பெரியார் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29 )சிவில் இன்ஜினியர்..இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மேட்டுப்பாளையத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மனைவியை பார்க்க சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டுகிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த லேப்டாப் -வெள்ளி காமாட்சி வழக்கு ஆகியவற்றை யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்து மணிகண்டன் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து தேனி மாவட்ட பெரியகுளம், கட்டான் ஜி காலனியை தெருவை சேர்ந்த மாரி என்ற மாரிமுத்து ( வயது 28) காசி என்ற வெள்ளி யாண்டி ( வயது 21) பாலு என்ற முத்துமாறன் ( வயது 18 )ஆகியோரை கைது செய்தார்.இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களிடமிருந்து லேப்டாப், வெள்ளி குத்துவிளக்கு மீட்கப்பட்டது .மேலும் விசாரணை நடந்து வருகிறது.