ரயில் முன் பாய்ந்து கோவை பைனான்ஸ் அதிபர் தற்கொலை..

கோவை அருகே உள்ள வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ( வயது 52) இவர் ராம் நகரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். கோவை ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார் .இதில் கடன் நெருக்கடி காரணமாக பாலசுப்ரமணியம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது . இவருக்கும் மனைவி, மகன், மகள், உள்ளனர்.