கோவை அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டரின் லேப்டாப் திருட்டு..!

கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருபவர் கோபிநாத். அங்குள்ள விடுதியில் தங்கி மயக்க மருந்து சிகிச்சை துறையில் மருத்துவ படிப்பு இரண்டாம் ஆண்டுபடித்து வருகிறார் .இவர் தனது அறையில் லேப்டாப் உட்பட பல்வேறு பொருட்கள் வைத்திருந்தார் நேற்று முன் தினம் அவர் மருத்துவமனைக்கு சென்று விட்டு இரவில் அறைக்கு வந்தார் .அப்போது அறையில் இருந்த லேப்டாப்பை காணவில்லை.யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இது குறித்து பயிற்சி டாக்டர் கோபிநாத் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.