கோவை பட்டதாரி பெண் திடீர் மாயம் – காதலனுடன் ஓட்டம்..?

கோவை குனியமுத்தூர், ராஜகோபால் நகரை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகள் விஜய சுஷ்மிதா ( வயது 23 )பிகாம் பட்டதாரி.நேற்று முன்தினம் இரவில் இவருடைய வீட்டில் எல்லோரும் படுத்து தூங்கிய பிறகு விஜய சுஷ்மிதா திடீரென்று எழுந்து எங்கே சென்று விட்டார். தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் செல்வகுமாரி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீஸ் விசாரணையில் அவர் தனது காதலருடன் எங்கோ மாயமாகி இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.