கோவை ஓட்டல் ஷட்டர் பூட்டை உடைத்து பணம் திருட்டு – ஊழியர் கைவரிசை..!

பொள்ளாச்சி சேத்துமடை, அண்ணா நகரை சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 66) இவர் பொள்ளாச்சி – மீன் கரை ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் யாரோ ஓட்டல் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மேஜை டிராயரில் இருந்த 61 ஆயிரத்து 830 ரூபாயை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஷேக் முகமது பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து அதே ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்த ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர் ஊரைச் சேர்ந்த ஏசுதாஸ் மகன் ஜோஸ்வா (வயது 20) என்பவரை நேற்று மாலை கைது செய்தனர் . இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..