கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கொம்பையா பாண்டி, இவரது மகன் முத்துராமலிங்கம் (வயது 28 )அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் இவரை வழிமறித்து நகை – பணம் கேட்டனர் . அவர் கொடுக்க மறுத்ததால் அவர்களிடம் அரிவாளை காட்டியும் , கத்தியை கழுத்தில் வைத்தும் மிரட்டினர். பின்னர் அவர் அணிந்திருந்த தங்க மோதிரத்தை பறித்தனர். அப்போது முத்துராமலிங்கம் சத்தம் போட்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அவர்களை அந்த கும்பல் கத்தி அரிவாளை காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்று விட்டது . இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து காமராஜர் புரம் சங்கனூர் மெயின் ரோட்டை சேர்ந்த அருண்குமார் ( வயது 22) கவுதம் (வயது 23) திவாகர் (வயது 23) ஹரி குந்த் ( வயது19) ஆகியோரை கைது செய்தார். இவர்களிடமிருந்து கத்தி , அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது..
கோவை ஐ.டி ஊழியரிடம் அரிவாளை காட்டி மிரட்டி நகை பறிப்பு – 4 கொள்ளையர்கள் கைது..!
