கண்ணில் மிளகாய் பொடி தூவி பெயிண்டருக்கு கத்திகுத்து – கோவை ஒட்டல் அதிபர் கைது..!

கோவை குனியமுத்தூர், வேடப்பன் பண்ணாடி வீதி சேர்ந்தவர் நாகராஜன் ( வயது 51) பெயிண்டர். இவர் நேற்று தனது நண்பருடன் பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு ஒட்டல் முன் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அந்த ஒட்டல் உரிமையாளரான இடையர்பாளையத்தை சேர்ந்த தாஸ் (வயது 54) அவர்களை கண்டித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஒட்டல் அதிபர் தாஸ் பெயிண்டர் நாகராஜன் கண்ணீல் மிளகாய் பொடியை தூவி கத்திரிக்கோலால் குத்தினார். இதில் நாகராஜனுக்கு காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஒட்டல் அதிபர் தாசை நேற்று கைது செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..