கேரளாவில் கடலில் மூழ்கி கோவை மருத்துவக்கல்லூரி மாணவர் பரிதாப பலி..

கோவை: கேரளா மாநிலம், திருசூர் மாவட்டம் தலிகுளம், ஸ்னேகதீரம் கடற்கரையில் வடக்கே அரபத் என்ற இடத்தில் நேற்று இருவர் கடலில் குளித்த நிலையில் ஒருவர் அலையில் சிக்கி பலியானார். மேலும் ஒருவர் உயிருடன் மீட்கபட்டார்.
விசாரணையில் உயிரிழந்தவர் கடலூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பது தெரிய வந்துள்ளது. இவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 2 கார்களில் நண்பர்கள் 9 பேர் சுற்றுலா வந்ததுள்ளனர். இதில் நண்பர்கள் 6 பேர் கடலில் இறங்கி குளித்துள்ளனர். எதிர்பாராத விதமாக அபிஷேக், ஹசன் ஆஷிக் ஆகியோர் அலையில் சிக்கிய நிலையில் ஹசன் ஆஷிக் என்பவரை ஸ்னேகதீரத்தில் பணியில் இருந்த பபீஸ்ஷ், ஐசக், சிஜு ஆகிய லைப்கார்டு வீரர்கள் ஹசன் ஆஷிகை உயிருடன் மீட்டனர். மேலும் அபிஷேக்கை மீட்கப்பட்ட நிலையில் மருத்துமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்துள்ளார். அபிஷேக் கடல் அலையில் சிக்கி அரைமணி நேரத்திற்கும் மேல் ஆனது தெரிய வந்துள்ளது. சம்பவம் அறிந்த வாடானபள்ளி காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.