கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மரணம்..

கோவையில் “கியூ பிராஞ்ச்”போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சந்திரமோகன். (வயது 48) . இவர் உடல்நல குறைவால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் மரணமடைந்தார். இவரது உடல் கோவை புலியகுளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று மதியம் கொண்டு வரப்பட்டது.அவரது உடலுக்கு ஏராளமான போலீஸ் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது உடல் போலீஸ் மரியாதையுடன் நஞ்சுண்டாபுரம், மின் மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது..